Published : 23 Apr 2016 08:24 AM
Last Updated : 23 Apr 2016 08:24 AM
விருத்தாசலம் தொகுதி அதிமுக வேட்பாளராக அக்கட்சியைச் சேர்ந்த நகரச் செயலாளர் வி.டி.கலைச்செல்வன் அறிவிக் கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக வன்னியர் ஒருங்கிணைப்பு இயக்கம் சார்பில் போஸ்டர் ஓட்டப்பட்டுள்ளது.
அந்த போஸ்டரில், ‘விருத் தாசலம் அதிமுக வேட்பாளர் கலைச்செல்வன் வன்னியர் என பொய் சான்றளித்து தொகுதியை அபகரித்ததை கண்டிக்கிறோம். போலி சான்றிதழ் கொடுத்து அரசையும், அதிமுகவையும் ஏமாற்றிய கலைச்செல்வனை மாற்றி, தகுதியான வன்னியருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து வன்னியர் ஒருங் கிணைப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி கூறும்போது, “வி.டி.கலைச் செல்வன் குரும்ப கவுண்டர் இனத்தைச் சேர்ந்தவர். குரும்ப கவுண்டர் இனம் வன்னியர் பட்டியலில் இடம்பெறவில்லை. மேலும் இவரது உடன் பிறந்த சகோதரர் ஜெயக்குமார் குரும்ப கவுண்டர் என்று ஜாதி சான்றிதழ் பெற்றிருக்கும்போது, இவர் மட்டும் வன்னியர் என எப்படி சாதி சான்றிதழ் பெற முடியும்? வன்னியர்கள் அதிகமுள்ள விருத்தாசலம் பகுதியில் போட்டியிடுவதற்காக வன்னியர் என பொய் சான்றளித்து வாய்ப்பை பெற்றுள்ளார். அதிமுக தலைமை இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக போஸ்டர் ஒட்டியுள்ளோம்” என்றார்.
வேட்பாளர் கலைச்செல்வனி டம் கேட்டபோது, “எனது பள்ளிச் சான்றிதழில் வன்னியர் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. எனது சகோதரர் ஜெயக்குமார், சிறு வயது முதலே எங்களது பாட்டி வீட்டில் வசித்து வந்த நிலையில் அவர்கள் ஜாதியை மாற்றி சொல்லியிருக்கலாம். மற்றபடி என்னிடம் வன்னியர் என்பதற்கான அனைத்து ஆதாரங் களும் உள்ளன. எனது கட்சியில் உள்ள சிலர் சர்ச்சைகளை கிளப்பி விடுகின்றனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT