Published : 12 Apr 2016 08:26 AM
Last Updated : 12 Apr 2016 08:26 AM

தேமுதிக, தமாகா, ம.ந.கூட்டணி தலைவர்கள் தீவிர பேச்சுவார்த்தை: தொகுதிகள் பட்டியல் இன்று வெளியாகும் வாய்ப்பு

தேமுதிக, தமாகா, மக்கள் நலக்கூட்டணி போட்டி யிடும் தொகுதிகள் பட்டியல் இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது எம்எல்ஏக்களாக உள்ள தொகுதிகள் அந்தந்த கட்சிகளுக்கு ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

தொகுதிகள் பங்கீடு தொடர்பான ஆலோ சனைக் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. முன்னதாக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினர். பிறகு, தேமுதிக இளைஞர் அணி செயலாளர் சுதீஷ், பொருளாளர் இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழுவுடன் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, ஜி.ராமகிருஷ் ணன், திருமாவளவன், முத்தரசன் ஆகியோர் நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பிரேமலதா போட்டியா?

தேமுதிக மூத்த நிர்வாகிகள் கூறும்போது, ‘‘எங்கள் கூட்டணியில் எந்தெந்த கட்சி, எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. கூட்டணி தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளை விட்டுக்கொடுப்பதிலும் எந்த பிரச்சினையும் இல்லை. கூட்டணி இறுதிக்கட்ட தொகுதி நிலவரப் பட்டியல் 12-ம் தேதி (இன்று) மாலை வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். தேர்தலில் பிரேமலதா போட்டியிட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் உண்மை இல்லை. அவர் போட்டியிடமாட்டார்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x