Published : 04 Apr 2016 08:25 AM
Last Updated : 04 Apr 2016 08:25 AM

தேமுதிக - ம.ந.கூட்டணி: மத்திய அமைச்சர் சந்தேகம்

நாகர்கோவிலில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: தேர்தல் செலவுக்கான பணத்தைக் கொண்டு செல்ல அரசு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தேர்தல் கருத்துக்கணிப்பு என்பது பணம் படைத்தவர்கள், தங்களின் வசதிக்கேற்ப உருவாக்கிக்கொள்வதுதான். அதிமுக, திமுக, மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகம் மீண்டும் இருண்ட காலத்தை நோக்கிச் செல்லும்.

கூட்டணி கட்சிகளுடன் பாஜக பேசி வருகிறது, நாளை அல்லது நாளை மறுநாள் இறுதி முடிவு எட்டப்படும். அதன்பின் பாஜகவின் அடுத்த வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் உள்ள ஒவ்வொரு தலைவருக்கும் ஒவ்வொரு கருத்து உள்ளது. இந்த கூட்டணி தேர்தல் வரை நீடிக்குமா என்பதே சந்தேகம்தான். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x