Published : 13 Apr 2016 08:58 AM
Last Updated : 13 Apr 2016 08:58 AM
இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் சி.சுப்பிரமணியம், சென்னையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
கோயில்களில் தரிசன கட்டணத்தை உடனடியாக நீக்க வேண்டும். மதச்சார்பற்ற அரசு கோயில்களை விட்டு வெளியேற வேண்டும். இந்து ஆன்மீகவாதிகளிடம் கோயில் நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும். மதமாற்ற தடைச் சட்டத்தை கொண்டுவர வேண்டும். பசுவதை தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். பொது சிவில் சட்டம், இந்துக்களுக்கும் சலுகைகள் போன்ற எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிப்பவர்களுக்கே இந்தத் தேர்தலில் இந்துக்கள் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்துவோம். பாஜகவை ஆதரிப்பது குறித்து முடிவு செய்யவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT