Published : 12 Jan 2022 07:26 AM
Last Updated : 12 Jan 2022 07:26 AM
திருவள்ளூர்: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், திருவள்ளூர் மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட 1,09,200 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த 3-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், திருவள்ளூர் சி.எஸ்.ஐ. கௌடி மேல்நிலைப் பள்ளியில் 850 மாணவ-மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று நடைபெற்றது. இதை பால்வளத் துறை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்து, செய்தியாளர்களிடம் கூறும்போது, "திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 10-ம் தேதி வரை 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட 74,106 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன" என்றார்.
இந்நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT