Published : 22 Apr 2016 08:54 AM
Last Updated : 22 Apr 2016 08:54 AM

லால்குடியில் ஐஜேகே அலுவலகம் தீக்கிரை: பாஜக, ஐஜேகேவினர் சாலை மறியல், தடியடி

இந்திய ஜனநாயகக் கட்சியின் லால்குடி தொகுதி தேர்தல் அலுவலகம் நேற்று முன்தினம் இரவு தீக்கிரையானது.

லால்குடி-பூவாளூர் சாலையில் இந்திய ஜனநாயகக் கட்சியின் லால்குடி தொகுதி தேர்தல் அலு வலகத்தை கடந்த 18-ம் தேதி அந்தக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் திறந்துவைத்தார். தொடர்ந்து, லால்குடி தொகுதி ஐஜேகே வேட்பாளர் செல்வக்குமாரை அறிமுகப்படுத்திவிட்டு, பாரிவேந் தரும் அவரது மகன் சத்திய நாராயணனும் லால்குடி பகுதி யில் பிரச்சாரத்தில் ஈடு பட்டனர்.

அன்று நள்ளிரவு திடீரென அந்தத் தேர்தல் அலுவலகம் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து லால்குடி தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், தேர்தல் அலுவலகம் முற்றிலும் எரிந்து நாசமானது.

தகவலறிந்த பாஜக ஒன்றியத் தலைவர் முருகேசன், ஐஜேகே ஒன்றியத் தலைவர் ராஜ்குமார் உள்ளிட்ட இரு கட்சியினரும் வந்து, அலுவலகத்துக்கு தீ வைத்த நபர்களை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீஸார் வந்து பேச்சு வார்த்தை நடத்தியும் போராட் டத்தைக் கைவிடாததால், தடியடி நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனர். இந்த தீ விபத்து தொடர்பாக லால்குடி போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x