Published : 07 Apr 2016 11:40 AM
Last Updated : 07 Apr 2016 11:40 AM
தேர்தல் ஆணைய அங்கீகாரத்துக்காக மக்கள் நலக் கூட்டணி கட்சிகள் போராடி வருகின்றன என்றார் பாஜக தேசியக் குழு உறுப்பினர் இல. கணேசன்.
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் பேருந்து நிலையம் அருகில், பட்டுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை ஆதரித்து, செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் பேசியது, "மக்கள் நலக் கூட்டணியில் உள்ள 4 கட்சிகளும் குறிப்பிட்ட சதவீத ஓட்டுகளை வாங்காவிட்டால், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் என்ற தகுதியை இழந்துவிடும். அவற்றின் சின்னங்களும் பறிபோய் விடும்.
தேர்தல் ஆணைய அங்கீகாரத்துக்காகவே மக்கள் நலக் கூட்டணி கட்சிகள், தனி கூட்டணி அமைத்துப் போராடி வருகின்றன. அதனுடன் கூட்டணி வைத்துள்ள தேமுதிகவும் இப்போது அந்தப் பட்டியலில் சேர்ந்துவிடும் போல் உள்ளது.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே, விஜயகாந்த் முதல்வர், வைகோ துணை முதல்வர், திருமாவளவன் கல்வி அமைச்சர் என விஜயகாந்தின் மைத்துனர் அறிவிக்கிறார். கூட்டணிக்கு தலைவர் யார்?இதிலிருந்தே மக்கள் நல கூட்டணிக்கு எந்தக் கொள்கையும் இல்லை என்பது தெளிவாகிறது" என்றார்.
கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ரெத்தினசபாபதி, மாநில விவசாய அணி துணைத் தலைவர் ஜெயகுமார், கோட்ட அமைப்பாளர் ஐயாரப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT