Published : 31 Dec 2021 07:57 AM
Last Updated : 31 Dec 2021 07:57 AM

5 விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம்

சென்னை

தண்டவாள பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால், வைகை உட்பட 5 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை எழும்பூர்-விழுப்புரம் தடத்திலும், சென்னை சென்ட்ரல்-கூடூர் தடத்திலும் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், சில விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் ஜனவரி 4-ம் தேதி விஜயவாடா-சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (12711) கூடூர் வரை மட்டும் இயக்கப்படும். சென்னை சென்ட்ரல்-விஜயவாடா விரைவு ரயில் (12712) கூடூரில் இருந்து இயக்கப்படும்.

இதேபோல, மதுரை-சென்னை எழும்பூர் வைகை விரைவு ரயில் (12636) வரும் 5, 19-ம் தேதிகளில் விழுப்புரம் வரை மட்டுமே இயக்கப்படும். சென்னை எழும்பூர்-காரைக்குடி பல்லவன் விரைவு ரயில் (12605) விழுப்புரத்தில் இருந்து இயக்கப்படும். புதுச்சேரி-புதுடெல்லி விரைவு ரயில் (22403) மேற்கண்ட 2 நாட்களில் மாற்றுப் பாதையாக காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக இயக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x