Published : 30 Mar 2016 08:18 AM
Last Updated : 30 Mar 2016 08:18 AM
திமுகவில் நடத்தப்பட்ட நேர்காணல் அடிப்படையில் ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தங்கள் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் யார், யாரை நிறுத்தலாம் என்ற பட்டியலை மாவட்டச் செயலாளர்களிடம் ஸ்டாலின் பெற்றுள்ளார். இது தவிர பொதுச்செயலாளர் அன்பழ கன், மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, முதன்மைச் செய லாளர் துரைமுருகன் உள்ளிட் டோரும் சிலரது பெயர்களை பரிந்து ரைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக திமுக நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘கடந்த மக்களவைத் தேர்தலைப்போல இந்த முறையும் ஸ்டாலின்தான் வேட்பாளர் பட்டியலை தயாரித்து வருகிறார். நேர்காணல் மூலம் தயாரிக்கப்பட்ட பட்டியல், மாவட்டச் செயலாளர்கள் அளித்துள்ள பட்டி யல், க.அன்பழகன், கனிமொழி உள்ளிட்டோரின் பரிந்துரை ஆகிய அனைத்தையும் ஆய்வு செய்து வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் ஸ்டாலின் தீவிர மாக ஈடுபட்டுள்ளார். பட்டியல் தயாரானதும் அதை கருணாநிதியி டம் அளிப்பார். அதில் அவர் சில மாறுதல்களை செய்ய வாய்ப் புள்ளது’’ என்றார்.
திமுகவைப் பொறுத்தவரை தற்போதுள்ள 23 எம்எல்ஏக்களுக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. இவர்கள் தவிர 65 மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்களில் பெரும் பாலானோருக்கு வாய்ப்பு கிடைக் கும் எனக் கூறப்படுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுகவில் இளைஞர் கள், பெண்களுக்கு அதிக வாய்ப் புகள் வழங்கப்படும் என ஸ்டாலின் ஏற்கெனவே கூறியிருந்தார். ஆனால், க.அன்பழகன் தனது பேரன் வெற்றிச் செல்வனுக்கும், ஆற்காடு வீராசாமி மகன் கலாநிதிக்கும் வாய்ப்பு கேட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுதவிர துரைமுருகன், பொன் முடி, பொங்கலூர் பழனிச்சாமி, மு.கண்ணப்பன் என முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் பலரும் தங்கள் வாரிசுகளுக்கு வாய்ப்பு கேட்டு நெருக்கடி கொடுப் பதாகவும், இதனால் புதியவர்க ளுக்கான வாய்ப்புகள் குறையும் எனவும் அக்கட்சியினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஏப்ரல் 13-ம் தேதிக்குப் பிறகு திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என அக்கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT