Last Updated : 16 Mar, 2016 09:15 AM

 

Published : 16 Mar 2016 09:15 AM
Last Updated : 16 Mar 2016 09:15 AM

அனுபவமில்லாத அமைச்சர்களால் கூட்டணி வாய்ப்பு கைநழுவியதா?- அதிருப்தியில் பாஜக நிர்வாகிகள்

கடந்த மக்களவைத் தேர்தலைப் போலவே சட்டப்பேரவைத் தேர்தலி லும் தேமுதிக, பாமகவுடன் கூட்டணி அமைக்க பாஜக திட்டமிட்டது. முதல்கட்டமாக பி.முரளிதர ராவ், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எஸ்.மோகன்ராஜூலு ஆகியோர் விஜயகாந்த், அன்புமணி ராமதாஸுடன் பேச்சு நடத்தினர்.

இதற்கு எந்தப் பலனும் இல்லாத நிலையில் கூட்டணி பேச்சு நடத்த மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், பியூஷ் கோயல் ஆகி யோரை பாஜக தலைவர் அமித்ஷா நியமித்தார். கடந்த பிப்ரவரி 28-ம் தேதி சென்னை வந்த ஜவடேகர், விஜயகாந்தையும் அன்புமணியையும் சந்தித்துப் பேசினார். இருவரும் எந்தப் பிடியும் கொடுக்கவில்லை.

அதைத் தொடர்ந்து கடந்த 3-ம் தேதி மாநிலத் தலைவருக்குக்கூட தெரிவிக்காமல் சென்னை வந்த ஜவடேகர், யாரையும் சந்திக்க முடி யாமல் ஏமாற்றத்துடன் டெல்லி திரும் பினார். மத்தியில் தனித்து ஆட்சி யில் இருந்தபோதிலும் தமிழகத் தில் யாருடனும் கூட்டணி அமைக்க முடியாதது பாஜகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாஜ்பாய் காலத்தில் கூட்டணி பேச்சு நடத்த அத்வானி, ஜஸ்வந்த் சிங், பிரமோத் மகாஜன், ஜார்ஜ் பெர்ணான்டஸ் போன்ற முக்கிய தலைவர்கள் களமிறக்கப்பட்டனர். ஆனால், தற்போது அனுபவமில்லாத அமைச்சர்களை நம்பி கூட்டணி வாய்ப்பை நழுவவிட்டு விட்டதாக அக் கட்சிக்குள் சலசலப்பு எழுந்துள்ளது.

‘தமிழகத்தில் கூட்டணியை முடிவு செய்ய முதலில் மூத்த தலைவரான வெங்கய்ய நாயுடுவை அமித்ஷா கேட்டுக் கொண்டார். அவர் மறுக் கவே பிரகாஷ் ஜவடேகரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், முதிர்ச்சியற்ற அவரது அணுகுமுறை யால் கூட்டணி வாய்ப்பு நழுவிச் சென்றுவிட்டது. இது தொடர்பாக தமிழக பாஜக சார்பில் மேலிடத்தில் புகார் தெரிவித்துள்ளோம்’ என்று கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x