Published : 25 Mar 2016 08:57 AM
Last Updated : 25 Mar 2016 08:57 AM

பிரேமலதாவுக்கு பாதுகாப்பு கேட்டு தேர்தல் அதிகாரியிடம் மனு

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் தேமுதிக தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி எம்எல்ஏ சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் தேமுதிக சார்பில் தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இதில் பிரேமலதா விஜயகாந்த் சிறப்புரை ஆற்றவுள்ளார். இக்கூட்டம் மார்ச் 25 முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.

எனவே, தேமுதிக தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டத்துக்கும் அதில் கலந்துகொள்ளும் பிரேமலதாவுக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x