Published : 22 Mar 2016 05:57 PM
Last Updated : 22 Mar 2016 05:57 PM
'திமுக கருணாநிதியின் கட்டுப்பாட்டிலேயே இல்லை. திமுகவில் குழப்பம் நிலவி வருகிறது' என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக திமுக தலைவர் கருணாநிதி கடந்த திங்கட்கிழமை கூறினார். ஆனால், எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று கூறினார்.
இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
"திமுக கூட்டணியில் இணைய வேண்டி தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக திமுக தலைவர் கருணாநிதி கடந்த திங்கட்கிழமையன்று கூறினார். ஆனால், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் , அப்படி பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை என்று கூறுகிறார். இதில் யார் சொல்வது உண்மை என்று தெரியவில்லை. நானும் திமுகவில் பல ஆண்டுகள் இருந்திருக்கிறேன். இப்படியொரு நிலை திமுகவுக்கு வந்தது இல்லை.
திமுக கருணாநிதியின் கட்டுப்பாட்டிலேயே இல்லை. திமுகவில் குழப்பம் நிலவி வருகிறது. நான் சிண்டு முடிவதாக திமுகவுக்கு இன்று வந்த சில கார்ப்பரேட் கும்பல்கள் கூறக்கூடும். ஆனால், அரசியல் அறிந்தவர்களுக்கு இந்த உண்மை புரியும்" என்றார் வைகோ.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT