Published : 12 Mar 2016 07:22 PM
Last Updated : 12 Mar 2016 07:22 PM

இந்தியா, பாக். மீனவர்கள் விடுதலைக்கு வரவேற்பு

இந்தியா, பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த இருநாட்டு மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதை தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்கக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

இது தொடர்பாக இக்கூட்டமைப்பின் மாநிலச் செயலர் சி.ஆர். செந்தில்வேல் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பாகிஸ்தான் கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றம்சாட்டி, இந்தியாவைச் சேர்ந்த 87 மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்து அந்நாட்டுச் சிறையில் அடைத்தது. அதுபோல இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்த குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் மீனவர்கள் இந்தியச் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

தற்போது இரு நாட்டு மீனவர்களும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். இதேபோல் இலங்கை சிறைகளில் வாடும் 84 தமிழக மீனவர்கள், 81 படகுகளை தூதரக ரீதியிலான நடவடிக்கைகள் மூலம் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x