Published : 30 Mar 2016 08:09 AM
Last Updated : 30 Mar 2016 08:09 AM

ம.ந.கூ. ‘ஆல்பபெட் சூப்’: கார்த்தி சிதம்பரம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நேற்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறும்போது, ‘திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு நிச்சயமாக வெற்றி கிடைக்கும். தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் அடுத்த மாதம் முடிவாகும்.

காங்கிரஸில் விவாதங்கள் நடக்கும். கருத்து வேறுபாடு இருக்கும். ஆனால், தேர்தல் என்று வரும்போது அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றுவோம். காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுக் குழுவில் 8 நண்பர்கள் இருக்கிறார்கள். எனவே, அதில் எந்த பாதிப்பும் இருக்காது. மக்கள் நலக் கூட்டணி என்பது அனைத்து ஆங்கில எழுத்துகள் நிறைந்த ‘ஆல்பபெட் சூப்’. எழுத்துகள் கலந்த சூப் போன்றது’ என்றார். வெளிநாட்டு சொத்துக் குவிப்பு குறித்து கேட்டபோது, ‘வருமான வரி தாக்கல் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் முறையாக வைத்திருக்கிறேன். அதற்கு மேல் சொல்வதற்கும், செய்வதற்கும் ஏதுமில்லை’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x