Published : 25 Mar 2016 08:58 AM
Last Updated : 25 Mar 2016 08:58 AM
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சென்னை அண்ணா நகரில் உள்ள தனது இல்லத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
தேமுதிக இணைந்துள்ளதால், எங்களது கூட்டணி வலுவான அணியாக உள்ளது. தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியின் அணியை பூஜ்ஜியங்களின் கூட்டணி என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். பூஜ்ஜியம் என்று தெரிந்தபிறகும் தேமுதிக அலுவலகத்திலும், விஜயகாந்தின் இல்லத்திலும் பாஜகவினர் காத்துக் கிடந்தது ஏன்? தமிழ் மாநில காங்கிரஸும் எங்களது அணியில் இணைய வேண்டும். அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசனுக்கும் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT