Published : 12 Mar 2016 09:08 PM
Last Updated : 12 Mar 2016 09:08 PM
கூட்டணிக்கு தேமுதிக வரவில்லை என்ற விரக்தியில், மக்கள்நலக் கூட்டணியை தவறாக விமர்சிப்பதா என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் வைகோ கூறுகையில், ''கூட்டணிக்கு தாங்கள் அழைத்தும் தேமுதிக வரவில்லை என்ற விரக்தியில் மற்றவர்களை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வசைபாடுகிறார். ‘அதிமுகவின் பினாமிதான் மக்கள்நலக் கூட்டணி’ என்று அவர் கூறியுள்ளார். நான் அவரை 2ஜி ஊழலின் பினாமி என்று சொல்லலாமா? நாங்கள் கொள்கையை முன்வைத்து மக்களை சந்தித்து வருகிறோம். எனவே, ஸ்டாலின் அளந்து பேச வேண்டும்.
நாங்கள் அதிமுகவை விமர்சிக்கவில்லை என்கிறார்கள். எங்கள் கூட்டங்களில் அதிமுகவை விமர்சித்து 30 நிமிடம் பேசுகிறேன். ஸ்டாலினை விமர்சித்து 3 நிமிடம்தான் பேசுகிறோம்.
2011-ல் திமுக மீது இருந்த அதிருப்தியால் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தது. இப்போது தனித்து நிற்பதாக தேமுதிக கூறியுள்ளது. இதன்மூலம், திமுக மீதான தேமுதிகவின் கோபம் இன்றும் தொடர்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது'' என்று வைகோ கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT