Published : 28 Mar 2016 09:05 AM
Last Updated : 28 Mar 2016 09:05 AM
அரசியல்வாதிகளின் பணத்தை பறிமுதல் செய்யாமல், வியாபாரி களின் பணத்தை பறிமுதல் செய்து வரும் தேர்தல் ஆணையத்தை கண்டித்து போராட்டம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம் அனைத்து வணிகர் கள் பொதுநலச் சங்க கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை வாகன சோதனையில் ரூ.8 கோடி வரை தேர்தல் அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
தேர்தல் அலுவலர்களால் பறி முதல் செய்யப்படும் பணம் அனைத் தும் வியாபாரிகள் மற்றும் விவசாயி கள் உடையது. அரசியல்வாதிகளின் பணம் எந்த தங்கு தடையும் இன்றி சென்று கொண்டு தான் இருக்கிறது. அரசியல்வாதி களிடம் இருந்து இது வரை பணம் பறிமுதல் செய்யப் படவில்லை. தேர்தல் ஆணையத் தின் இந்த நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். அது தொடர்பாக திங்கள்கிழமை நடைபெறும் கூட்டத்தில் இடம், தேதி முடிவு செய்யப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT