Published : 18 Mar 2016 07:40 PM
Last Updated : 18 Mar 2016 07:40 PM
அதிமுக கூட்டணியில் 11 தொகுதிகள் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் கேட்டிருக்கிறார்.
கடந்த 13-ம் தேதி தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.
‘‘முதல்வருடன் பேசும்போது அமைச்சர்கள் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட வர்கள் இருந்தனர். அவர்களை காட்டி, இவர்கள் உங்களுடன் விரைவில் பேசுவார்கள் என தெரிவித்தார்’’ என்று வேல்முருகன் கூறினார்.
அதன்படி இன்று வைத்திலிங்கம், பழனிச்சாமி, தங்கமணி ஆகிய அமைச்சர்கள் வேல்முருகனுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில், 11 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று வேல்முருகன் கோரியுள்ளார். மேலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு சாதகமான 11 தொகுதிகளையும் தேர்வு செய்து, அந்தப் பட்டியலையும் அதிமுகவினரிடம் கொடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT