Published : 29 Mar 2016 08:47 AM
Last Updated : 29 Mar 2016 08:47 AM

திமுகவில் இணைந்தேனா? - மேட்டூர் தேமுதிக எம்எல்ஏ மறுப்பு

நான் திமுகவில் சேர்ந்ததாக வெளியாகியுள்ளது பொய்யான செய்தியாகும். இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என தேமுதிக எம்எல்ஏ பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

மேட்டூர் தேமுதிக எம்எல்ஏ திமுகவில் இணைந்ததாக நேற்று மாலையில் செய்திகள் வெளியாகின. இதேபோல், சமூக வலைதளங்களிலும் வேகமாக தகவல் பரவியது.

இது தொடர்பாக அவர் ‘தி இந்து’விடம் கூறுகையில், ‘‘நான் திமுகவில் இணைந்துவிட்டதாக நேற்று பொய்யான செய்தியை யாரோ திட்டமிட்டு பரப்பியுள்ள னர். இதனால், எனக்கு நூற்றுக் கணக்கான அழைப்புகள் வந்தன. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். வரும் 2-ம் தேதி எங்கள் பகுதியில் பொதுக்கூட்டம் நடக்கவுள்ளது. இதில் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்கவுள்ளார். இதற்கான பணிகளில் நான் ஈடுபட்டு வருகிறேன்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x