Published : 31 Mar 2016 09:26 AM
Last Updated : 31 Mar 2016 09:26 AM

துணை முதல்வர் பதவி எனக்கு வேண்டாம்: வைகோ

தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியின் மாற்று அரசியல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் சாத்தூரில் நேற்று நடைபெற்றது. இதில் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ பேசியதாவது:

தற்போது நடக்கும் அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லை. சிறு கடன் வாங்கிய விவசாயி அவமானப்படுத்தப்படுகிறார். பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிய விஜய் மல்லையா விமானத்தில் ஜாலியாக பறக்கிறார். இதுதான் இன்றைய மத்திய அரசின் நிலை.

தேர்தலின்போது வாக்காளர்களுக்கு யாரேனும் பணம் கொடுக்க முயன்றால் அவர் களை இளைஞர்கள் குழு அமைத்து தடுக்க வேண்டும். தேமுதிக -மக்கள் நலக் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும்போது, எனக்கு துணை முதல்வர் பதவியும் வேண்டாம், எந்த அமைச்சர் பதவியும் வேண்டாம். எந்த பதவியும் கற்பனையில் ஒரு சதவீதம் கூட கிடையாது. இவ்வாறு அவர் பேசினார். முத்தரசன், தொல்.திருமாவளவன் உள்ளிட்டோரும் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x