Published : 27 Mar 2016 11:17 AM
Last Updated : 27 Mar 2016 11:17 AM

அதிமுகவில் 6-வது நாளாக நேர்காணல்

அதிமுக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விருப்பு மனு அளித்தவர் களுக்கான 2-ம் கட்ட நேர்காணல் நடைபெற்று வருகிறது. 6-வது நாளான நேற்று சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புக் கேட்டவர்கள் நேர்காணலுக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.

முதல்வர் ஜெயலலிதா அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் நேர் காணல் நடத்தினார். காலையில் சிவகங்கை, விருதுநகர், மதுரை மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புக் கேட்டவர்களிட மும், பிற்பகலில் தேனி, தஞ்சை, திண்டுக்கல், புதுக் கோட்டை மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் போட்டியிட விருப் பம் தெரிவித்தவர்களிடமும் முதல்வர் ஜெயலலிதா நேர் காணல் நடத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x