Published : 19 Mar 2016 08:29 AM
Last Updated : 19 Mar 2016 08:29 AM

அதிமுக வேட்பாளராக களமிறங்க காத்திருக்கும் நடிகர் கஞ்சா கருப்பு

அதிமுக சார்பில் வாய்ப்புக் கிடைத்தால், சிவகங்கை தொகுதியில் போட்டியிடத் தயார் என்று திரைப்பட நடிகர் கஞ்சா கருப்பு தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியது: சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யத் தயாராக உள்ளேன். முதல்வர் ஜெயலலிதாவுக்காக பிரச்சாரம் செய்வதை நான் பெருமையாகக் கருதுகிறேன். எனினும், இதுவரை என்னை பிரச்சாரத்துக்கு யாரும் அழைக்கவில்லை.

அதிமுக சார்பில், எனது சொந்த தொகுதியான சிவகங்கையில் போட்டியிட வாய்ப்புக் கிடைத்தால், தேர்தலைச் சந்திக்க நான் தயார். அவ்வாறு போட்டியிடுவதால், எனது சினிமா பணிகள் பாதிக்கப்படாது. நான் யாரையும் மரியாதைக்குறைவாக பேசமாட்டேன். எப்போதும் நாகரிகமாகத்தான் பேசுவேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x