Published : 19 Oct 2021 03:07 AM
Last Updated : 19 Oct 2021 03:07 AM
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 8 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 41 கிராம ஊராட்சித் தலைவர் உட்படபாஜகவைச் சேர்ந்த 381 பேர்வெற்றி பெற்றுள்ளதாக அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவினர், சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்றுஅண்ணாமலையை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது தமிழக பாஜக முன்னாள் தலைவர்பொன்.ராதாகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உடன் இருந்தனர். பின்னர்செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:
நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு 8 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதுதவிர பாஜகவை சேர்ந்த 41 பேர் கிராம ஊராட்சித் தலைவர்களாகவும், 332 பேர் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களாகவும் வெற்றி பெற்றுள்ளனர். மத்திய அரசின் திட்டங்கள் கிராம மக்களுக்கு செல்வதற்காக இவர்கள் பணியாற்றுவார்கள்.
4 மடங்கு அதிக விலை
தமிழகத்தில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.20-க்கு, அதாவது உற்பத்தி விலையைவிட 4 மடங்கு அதிக விலைக்கு வாங்க திமுக அரசு ஆயத்தமாகி வருகிறது. இது, ஏற்கெனவே கடன் சுமையில் இருக்கும் மின்சார வாரியத்தை மேலும் மோசமாக்கிவிடும்.
பிரதமர் மோடிக்கு எதிராக வரம்பு மீறி பேசுபவர்கள் மீதுநடவடிக்கை எடுக்காத திமுக அரசு, பாஜக நிர்வாகி கல்யாணராமனை நள்ளிரவில் கைது செய்துள்ளது. தங்களை எதிர்த்து குரல் கொடுப்பவர்களை கைது செய்வது ஜனநாயகத்துக்கு எதிரானது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT