Last Updated : 06 Oct, 2021 01:09 PM

 

Published : 06 Oct 2021 01:09 PM
Last Updated : 06 Oct 2021 01:09 PM

நிதி நிறுவன மோசடி வழக்கில் உரிமையாளருக்கு 5 ஆண்டு சிறை: ரூ.60,000 அபராதம்

மதுரை

தேனி நிதி நிறுவன மோசடி வழக்கில் நிறுவன உரிமையாளருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

தேனியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (56). ஸ்ரீ பிரகாஷ் சிட்ஸ் மற்றும் பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தினார். கடந்த 2002-ல் பலரிடம் பல லட்சம் ரூபாய் டெபாசிட் வசூலித்து, பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதாக மணிகண்டன் உட்பட 8 பேர் மீது மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் 8 பேரையும் தேனி நீதிமன்றம் 2008-ம் ஆண்டு விடுதலை செய்தது.

இதை எதிர்த்து போலீஸார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சீராய்வு மனுத்தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், தேனி நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்து, வழக்கை மதுரை டான்பிட் நீதிமன்றம் விசாரிக்க 2014-ம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த மனுவை டான்பிட் நீதிபதி ஹேமானந்த் குமார் விசாரித்தார். அதில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

''இந்த வழக்கில் உள்ள ஒருவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். அவர் மீதான வழக்கு தனியாகப் பிரிக்கப்படுகிறது. நிதி நிறுவனத்தின் உரிமையாளர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இறந்தவர் போக மற்ற அனைவரும் விடுவிக்கப்படுகின்றனர்''.

இவ்வாறு நீதிபதி ஹேமானந்த் குமார் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x