Published : 06 Mar 2016 09:35 AM
Last Updated : 06 Mar 2016 09:35 AM
தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்துள்ள நிலையில், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், முன்கூட்டியே திட்டமிட்ட போராட்டங்களை நடத்த முடியாததால் அரசியல் கட்சியினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
வரும் 8-ம் தேதி திமுக எம்பி கனிமொழி தலைமையில் சேலத்தில் மதுவிலக்கை அமல் படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர். இதேபோல, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் எம்பி கனி மொழி தலைமையில் மது விலக்கை மையப்படுத்தி ஆர்ப் பாட்டம் நடத்த முடிவு செய்யப் பட்டு இருந்தது. திமுக மட்டு மின்றி மற்ற எதிர்க்கட்சிகளும் அரசுக்கு எதிராக பல்வேறு ஆர்ப்பாட்டம், போராட்டங்களை நடத்த திட்டமிட்டிருந்தன.
இந்நிலையில், தமிழகத்தில் மே16-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதையடுத்து தேர்தல் நடத்தைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால் அனைத்து போராட்டங்களையும் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT