Published : 22 Mar 2016 12:33 PM
Last Updated : 22 Mar 2016 12:33 PM
டாக்டர் அம்பேத்கரின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு சார்பில் தமிழகம் முழுவதும் ரத யாத்திரை நடக்க உள்ளது. சென்னை சத்தியமூர்த்தி பவனில் இந்த ரத யாத்திரையை காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தேசியத் தலைவர் கே.ராஜூ நேற்று தொடங்கி வைத்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், எஸ்.சி. பிரிவு மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை, தேசிய செய்தித் தொடர் பாளர் குஷ்பு உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பின்னர் நிருபர்களிடம் இளங் கோவன் கூறியதாவது:
திமுக தலைவர் கருணாநிதியுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற் காக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், தேசிய பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோர் இன்னும் ஓரிரு நாளில் சென்னை வரவுள்ளனர்.
திமுக கூட்டணியில் இணையுமாறு தேமுதிகவுக்கு கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார். நாங்களும் அழைப்பு விடுத்துள்ளோம். அதிமுகவை வீழ்த்த திமுக - காங்கிரஸ் கூட்டணியே போது மானது. தேமுதிக வந்தால் கூடுதல் பலமாக இருக்கும் என்பதற்காகவே அழைப்பு விடுத்தோம்.
தோல்வி பயத்தில்தான் தேமுதிகவை திமுக அழைப்பதாக வைகோ கூறியுள்ளார். தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் தினமும் ஏதாவது சொல்லி வருகின்றனர்.
ப.சிதம்பரம் நாடறிந்த பொருளா தார மேதை. மாபெரும் தலைவர். எனவே, தொகுதிப் பங்கீடு பேச்சு நடத்துதற்கான சிறிய குழுவில் அவர் இடம்பெறவில்லை. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ப.சிதம்பரத்தின் ஒப்புதலுக்கு பிறகே வெளிவரும்.
இவ்வாறு இளங்கோவன் கூறினார்.
தொகுதி பங்கீடு குழு கூட்டம்
திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்காக இளங்கோவன் தலைமையில் கே.கோபிநாத், கே.வீ.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி, டி.யசோதா, சு.திருநாவுக்கரசர், தனுஷ் கோடி ஆதித்தன், ஏபிசிவி சண்முகம் ஆகிய 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் முதல் கூட்டம், சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. கோபிநாத் தவிர மற்றவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுகவிடம் கேட்க வேண்டிய தொகுதிகளை அடையாளம் காண்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக இளங்கோவன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT