Published : 21 Feb 2016 10:09 AM
Last Updated : 21 Feb 2016 10:09 AM
தமிழகத்தில் பாமக ஆட்சி அமைந்தால் அனைவருக்கும் அரசுப் பேருந்துகளில் இலவச பயண அனுமதி வழங்கப்படும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
தருமபுரியில் செய்தியாளர் களிடம் அவர் கூறியது: தற்போது சென்னையில் 3500 அரசுப் பேருந்துகள் இயங்குகின்றன. தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வந்தவுடன் 8000 அரசு பேருந்து கள் இயக்கப்படும். முதற்கட்டமாக தலைநகரிலும், பின்னர் தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் அனைவருக்கும் இலவச பயண அனுமதி வழங்கப்படும். இதன் மூலம் தனியார் வாகன நடமாட்டம் குறைந்து சுற்றுச்சூழல் மாசு தடுக்கப்படும். பாமக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள கடன்களை முதற்கட்டமாக தள்ளுபடி செய்யும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT