Published : 13 Aug 2021 11:54 AM
Last Updated : 13 Aug 2021 11:54 AM

தமிழக பட்ஜெட் 2021: நீதித்துறை நிர்வாகத்துக்கு ரூ. 1,713 கோடி ஒதுக்கீடு

நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.

சென்னை

நீதித்துறை நிர்வாகத்துக்கு ரூ. 1,713 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக. 13) காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்து உரையாற்றினார்.

அதன் சிறப்பம்சங்கள்:

*தமிழகத்தில் செயல்படும் 1,280 நீதிமன்றங்களில் 1,099 நீதிமன்றங்கள் அரசுக்கு சொந்தமான கட்டிடங்களில் செயல்படுகின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து நீதிமன்றங்களுக்கும் போதிய கட்டிடம் அமைக்க உறுதி செய்யப்படும்.

* நீதித்துறையில் அனைத்து காலிப்பணியிடங்களும் நிரப்பப்படும்.

* நீதித்துறை நிர்வாகத்துக்கு ரூ. 1,713 கோடி ஒதுக்கீடு

* தமிழகத்தில் ரூ.9,370 கோடி மதிப்பீட்டில் கோவிட் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இது, நாட்டிலேயே வழங்கப்பட்ட மிகப்பெரிய நிவாரண தொகுப்பு

* தேவையுள்ள இடங்களில் புதிய நியாயவிலை கடைகளை ஏற்படுத்த குழு ஒன்று ஏற்படுத்தப்படும்.

* மானிய விலையில் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் ஆகியவை தொடர்ந்து வழங்கப்படும்.

* உணவு மானியத்துக்கான ஒதுக்கீடு ரூ. 8,437 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x