Published : 08 Aug 2021 07:16 PM
Last Updated : 08 Aug 2021 07:16 PM

கரோனா தொற்று இன்னும் நம்மை விட்டுப் போகவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்: கோப்புப்படம்

சென்னை

கரோனா தொற்று இன்னும் நம்மை விட்டுப் போகவில்லை என, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக இருந்தபோது, ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 35 ஆயிரம் என்ற அளவில் இருந்துவந்தது. இந்நிலையில், படிப்படியாகத் தொற்று குறைந்து தினசரி பாதிப்பு 2,000-க்கும் கீழ் குறைந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக சென்னை, கோவை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் நேற்று மட்டும் 1,959 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. 29 பேர் உயிரிழந்தனர். சென்னையில் 194 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், சென்னையில் இன்று (ஆக. 08) நிகழ்ச்சியொன்றில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கரோனா தொற்று இன்னும் நம்மை விட்டுப் போகவில்லை. தமிழகத்தில் இன்றைக்குக் கூட 1,956 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 187 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x