Published : 26 Dec 2015 09:28 AM
Last Updated : 26 Dec 2015 09:28 AM

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமம் ரத்து

கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறையை பயன்படுத்தி கொண்டு பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த 2 நாட்களாக சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இதை வாய்ப்பாக பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் வழக்கமாக கட்டணம் வசூலிப்பதை காட்டிலும் ரூ.400 முதல் ரூ.700 வரையில் அதிகமாக வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அதி காரி க.பழனிசாமி கூறுகையில், ‘‘ஆம்னி பேருந்து களில் அதிக கட்டணம் வசூலிப்பது மற்றும் விதி முறைகளை மீறி இயக்கப்படுவோர் மீது நட வடிக்கை எடுக்க ஒவ்வொரு ஆர்டிஓ தலைமையில் தலா 5 வாகன ஆய்வாளர்கள் கொண்ட 6 குழுக் களுடன் கடந்த 2 நாட்களாக கோயம்பேடு, கிண்டி, திருவான்மியூர், செங்கல்பட்டு உட்பட மொத்தம் 5 இடங்களில் ஆய்வு நடத்தியுள்ளோம். 50 ஆம்னி பேருந்துகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். சுமார் ரூ.1 லட்சம் வரை அப ராதம் வசூலித்துள்ளோம். அடுத்த 2 நாட்களுக்கும் இந்த குழு பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஆய்வு நடத்தும்’’ என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x