Published : 21 Dec 2015 08:31 PM
Last Updated : 21 Dec 2015 08:31 PM

முதல்வரை திட்டி வாட்ஸ்ஆப் பேச்சு: டிராபிக் ராமசாமி மீது அவதூறு வழக்கு

வெள்ள நிவாரணத்தின் போது தமிழக முதல்வரை திட்டி வாட்ஸ் ஆப் வீடியோ வெளியிட்ட டிராபிக் ராமசாமி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நடந்த வெள்ள நிவாரணப் பணியின் போது அதிமுகவினர் இடையூறு செய்ததாக கூறி டிராபிக் ராமசாமி வாட்ஸ் ஆப் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில் அவர் தமிழக முதல்வரை தரக்குறைவாக திட்டிப் பேசியதாக உளவுத்துறை போலீசார் சமர்ப்பித்த ஆதாரங்களின் அடிப்படையில், அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் டிராபிக் ராமசாமி மீது சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x