Published : 14 Dec 2015 08:21 PM
Last Updated : 14 Dec 2015 08:21 PM
கல்வியை வணிகமயமாக்கும் உலக வர்த்தக நிறுவன ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''உலக வங்கி மற்றும் உலக வர்த்தக நிறுவனம் ஆகியவை உருவாக்கிய உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் 1995-ல் கையெழுத்திட்டன.
உலக வர்த்தக ஒப்பந்தம் (காட்) நடைமுறைக்கு வந்த 20 ஆண்டுகளில் உலக நாடுகளிடையே பொருளாதார ஏற்ற தாழ்வுகளும், சமச்சீரற்ற வளர்ச்சியும் ஏற்பட்டது. உலக வர்த்தக ஒப்பந்தத்தில் கல்வித் துறையையும் சேர்க்கிற வரைவுத் திட்டத்தை காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளுக்கு உலக வர்த்தக நிறுவனம் அனுப்பியுள்ளது.
உலக வர்த்தக நிறுவனத்தின் உறுப்பு நாடுகளுக்கான 10-வது வர்த்தக அமைச்சர்கள் மாநாடு கென்யா தலைநகர் நைரோபியில் வரும் 15 முதல் 18 வரை நடக்கிறது. இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளவுள்ள வர்த்தக அமைச்சர், கல்வித் துறை வர்த்தக மயமாக்கும் திட்டத்தில் கையெழுத்திடவுள்லார். இது கண்டனத்துக்கு உரியது. இந்த திட்டம் நிறைவேறினால், கல்வி என்பது வணிகமயகாகி, ஏழைகளுக்கு எட்டாத ஒன்றாகிவிடும்'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT