Published : 03 Jun 2021 03:12 AM
Last Updated : 03 Jun 2021 03:12 AM
கரோனா தொற்று ஒழிய அறநிலையத் துறைக்குச் சொந்தமான அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு யாகபூஜை நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கோரிக்கை விடுத்துள்ளார்
இதுகுறித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் கூறியதாவது:
அனைத்து கோயில் அர்ச்சகர்களுக்கும் மளிகைப் பொருட்கள், ரூ.4 ஆயிரம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். அதேபோல, அர்ச்சகர்களுக்கு உதவி புரிவோருக்கும் இத்திட்டம் கிடைக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமப்புற கோயில் பூசாரிகள், அர்ச்சகர்களுக்கும் இந்த உதவி கிடைக்க வேண்டும்.
தமிழகத்தில் ஒரே நாளில் அனைத்து அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோயில்களிலும் கரோனா ஒழிய சிறப்பு யாகபூஜை நடத்த வேண்டும். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து கோயில்இடங்களையும் மீட்டு, கோயில்களிடமே வழங்க நடவடிக்கை எடுத்தார். அதுபோல் தமிழக அரசும்அனைத்து கோயில் சொத்துகளையும் முறையாக உள்ளதா என்பதை ஆய்வு செய்து, அவற்றை மீட்டு கோயில்களிடமே ஒப்படைக்க வழி செய்ய வேண்டும்.
தமிழகத்தில் அனைத்து மடாதிபதிகளும், அனைத்து ஆதினங்களும் கரோனா ஒழிய தினமும் சிறப்பு பூஜை செய்கிறார்கள். ஸ்ரீவில்லிபுத்தூர் மடத்திலும் நாளை சிறப்பு யாகமும், பூஜையும் நடக்கிறது. இதில் பொதுமக்கள் வீட்டில் இருந்துகொண்டே பிரார்த்தனை செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT