Published : 11 Dec 2015 11:14 AM
Last Updated : 11 Dec 2015 11:14 AM

வெள்ளத்தால் பழுதடைந்த சமையலறை மின் சாதனங்களை சரி செய்ய சிறப்பு முகாம்: ப்ரீத்தி கிச்சன் அப்ளையன்ஸ் நிறுவனம் அறிவிப்பு

சென்னையில் வெள்ளத்தால் பழுதடைந்துள்ள ப்ரீத்தி கிச்சன் அப்ளையன்ஸ் நிறுவனத்தின் மின் சாதன பொருட்களை பழுது பார்ப்பதற்கான சிறப்பு முகாம்களுக்கு அந்நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

இது தொடர்பாக ப்ரீத்தி கிச்சன் அப்ளையன்ஸ் நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னையில் ஏற்பட்ட வெள் ளத்தால் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் சமையலறை பொருட் கள் பெருமளவில் சேதமடைந் துள்ளன. இந்நிலையில், ப்ரீத்தி நிறுவனத்தின் மிக்ஸர், கிரைண் டர், இண்டக்‌ஷன் குக் டாப், காபி மேக்கர், கெட்டில் உள்ளிட்ட மின் சாதனங்கள் பழுது அடைந்திருந்தால், அவற்றை பழுது பார்ப்பதற்காக எங்கள் தரப்பில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேற்கண்ட சமையலறை மின் சாதனங்களுக்கு உத்தரவாதம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சிறப்பு முகாம்கள் மற்றும் ப்ரீத்தி சேவை மையங்களில் பொதுமக்கள் பழுது பார்த்துக் கொள்ளலாம்.

தொடர்புகொள்ள..

மோட்டார் மாற்றுவது வெப்ப அலகு மற்றும் பிசிபி ஆகியவற் றுக்கு 50 சதவீதம் கட்டணம் வசூ லிக்கப்படும். ஏனைய பாதிப்புகள் இலவசமாகவும், செய்கூலி இன்றி யும் சரி செய்து தரப்படும். எங்களது பழுது பார்க்கும் முகாம்கள் மற்றும் சேவை மையங்கள் குறித்த விவரங்களை பெறுவதற்கு 9940000005 என்னும் அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x