Published : 01 Jun 2021 03:13 AM
Last Updated : 01 Jun 2021 03:13 AM
மதுரையில் அதிமுக எம்எல்ஏ.க் கள் தெரிவித்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள் ளன என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
மதுரை கிழக்குத் தொகுதிக் குட்பட்ட குலமங்கலம், சின்னப் பட்டியில் ரூ.15 லட்சத்தில் புதிய மின்மாற்றிகளை அமைச்சர் பி.மூர்த்தி பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தார். தோப்பூரில் 150 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய மருத்துவச் சிகிச்சை மையத்தை ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: பல்வேறு சங்க நிர்வாகிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைவரின் ஆலோசனைகள், கோரிக்கைகள் உடனுக்குடன் ஏற்கப்படுகிறது. மதுரை ஆட்சி யரிடம் அதிமுக எம்எல்ஏ.க்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறை வேற்றும்படி கேட்டுள்ளனர். அவர்கள் கேட்கும் முன்னரே பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அரசு மருத்துவமனை கரோனா நோயாளிகளுக்கு சுடுதண்ணீர் உடனே கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு முழுமையாக இல்லை. மதுரை மாவட்டத்தில் படிப்படியாக கரோனா தொற்று குறைந்து வருகிறது.
அனைத்துக் கிராமங்களிலும் காய்ச்சல் பரிசோதனை செய் யப்படுவதுடன் கபசுரக் குடிநீர் வழங்கப்படுகிறது.
100 கிராமங்களில் மினி கரோனா சிகிச்சை மையங்கள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. வரும் நாட்களில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளை 12 மணி நேரத்தில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் எஸ்.விசாகன், எம்எல்ஏக்கள் கோ.தளபதி, பூமிநாதன், வெங்க டேசன் ஆகியோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT