Published : 22 Dec 2015 08:39 AM
Last Updated : 22 Dec 2015 08:39 AM

தமிழகத்தில் ஆட்சியில் அங்கம் வகிப்போம்: பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திட்டவட்டம்

2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியில் அங்கம் வகிப்போம், அல்லது ஆட்சி அமைப்போம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

பாஜகவின் சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கை கருத்துக் கேட்புக் கூட்டம், திருப்பூரில் நேற்று நடைபெற்றது. இதில், பங்கேற்க வந்த செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

நாங்கள் சொல்லும் வார்த்தை கள், தமிழக மக்களுக்கு பய னுள்ளதாகவும், நிறைவேற்றக் கூடியதாகவும் இருக்கும். மக்க ளுக்கு பயனளிக்கும் வகையில் தேர்தல் அறிக்கையை தயார் செய்கிறோம். தமிழக அரசின் வெள்ள நிவாரண கோரிக்கையை சில மணி நேரங்களிலேயே பிரதமர் மோடி நிறைவேற்றினார். தமிழகத்தின் மீது உண்மையான அக்கறை மற்றும் குறிக்கோளோடு மத்திய அரசு செயல்படுகிறது.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தேமுதிக எங்களுடன் இருக்க வேண்டும் என்பது விருப்பம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x