Published : 24 May 2021 05:35 PM
Last Updated : 24 May 2021 05:35 PM

திண்டுக்கல் மாவட்ட எல்லையில் 11 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிப்பு: பணியிலிருந்த போலீஸாருக்கு கபசுரகுடிநீர் வழங்கிய எஸ்.பி., 

திண்டுக்கல்லில் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் போலீஸாருக்கு கபசுரகுடிநீர் வழங்கிய திண்டுக்கல் எஸ்.பி., ரவளிபிரியா.

திண்டுக்கல்

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு இன்று அமலுக்கு வந்ததையடுத்து திண்டுக்கல் மாவட்ட எல்லையில் 11 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்தும், மாவட்டம் முழுவதும் 37 இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டும் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததையடுத்து போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

திண்டுக்கல் டி.ஐ.ஜி., முத்துச்சாமி அறிவுரையின்படி, திண்டுக்கல் எஸ்.பி., ரவளிப்பிரியா தலைமையில் போலீஸார் மாவட்டம் முழுவதும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதற்காக மாவட்ட எல்லையில் 11 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணியில் போலீஸார் ஈடுபட்டுவருகின்றனர்.

மாவட்டம் முழுவதும் 37 இடங்களில் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 13 நான்கு சக்கரவாகனங்களிலும், 61 இருசக்கரவாகனங்களிலும் போலீஸார் ரோந்துப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் வரும் வாகனங்களை பறிமுதல் செய்ய திண்டுக்கல் எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.

ஊரடங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவரும் போலீஸாருக்கு திண்டுக்கல் டிஐஜி., முத்துச்சாமி, மாவட்ட எஸ்.பி., ரவளிபிரியா ஆகியோர் கபசுரகுடிநீர், பிஸ்கட் வழங்கினர்.

பழநி பெத்தநாயக்கன்பட்டி நரிக்குறவர் காலனியில் வசிக்கும் 250 நபர்களுக்கு உணவுப்பொட்டலங்களை தர்மசக்கரா அறக்கட்டளை சார்பில் திண்டுக்கல் எஸ்.பி., ரவளிபிரியா வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x