Published : 14 May 2021 03:12 AM
Last Updated : 14 May 2021 03:12 AM

கடன்களுக்கு 6 மாத வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்: முதல்வருக்கு ‘கொசிமா’ வேண்டுகோள்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தால் வழங்கப்பட்ட கடன்களுக்கு 6 மாதங்கள் வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் எனகோயமுத்தூர் சிட்கோ தொழிற் பேட்டை உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் (கொசிமா) தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள் ளது.

இதுகுறித்து, தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலினுக்கு கொசிமா தலைவர் பி.நல்லதம்பி நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதா வது: கரோனா 2-வது அலையால் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளன. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தால் வழங்கப்பட்ட கடன் களுக்கு 6 மாத காலம் வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். அதற்கு பிறகு 6 சதவீத வட்டி மானியத்தை முன்கூட்டியே வழங்கி தொழில் துறைக்கு உதவிட வேண்டும்.

புதிதாக உருவாக்கப்படும் தனியார் தொழிற்பேட்டைக்கும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மானியம் வழங்கி, அங்கு தொடங்கப்படும் தொழில் நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியம் 40 சதவீதமாக வழங்க வேண்டும். தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்துக்கு 500 கேவிஏ மின்மாற்றிகள் வழங்க வேண்டும். இதன் மூலமாக சிறு, குறு நிறுவனங்கள் எளிதில் கூடுதல்மின் பளு பெற்று, கால விரயம் இல்லாமல் உற்பத்தி திறனை அதிகப்படுத்த முடியும். 6 மாதங்கள் மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும்.

தமிழ்நாடு அரசு திறன்மேம்பாட்டு பயிற்சி மையத்தை மேம்படுத்தி பயிற்சி பெற்ற தொழிலாளர்களை உருவாக்க வேண்டும். தற்போதுள்ள மூலப்பொருள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த சிட்கோமூலமாக மூலப்பொருள் கிடங்கைஏற்படுத்தி சிறு,குறு தொழில்களுக்கு சலுகை விலையில் மூலப்பொருள் கடனாக வழங்க வேண்டும். மேலும், சிட்கோ பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக நிலவும் குடிநீர், சாலை மற்றும் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x