Published : 22 Dec 2015 08:49 AM
Last Updated : 22 Dec 2015 08:49 AM

சிலிண்டர்களை இழந்தவர்களுக்கு புதிதாக வழங்க 28 வரை சிறப்பு முகாம்

வெள்ளத்தால் சமையல் எரிவாயு சிலிண்டர்களை இழந்தவர்களுக்கு புதிய சிலிண்டர்களை வழங்குவதற் கான விண்ணப்பங்கள் தமிழக அரசு நடத்தி வரும் சிறப்பு முகாம்களில் வரும் 28-ம் தேதி வரை பெறப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

வெள்ளத்தால் ஆவணங்களை இழந்த மக்களுக்கு புதிய ஆவணங்களை வழங்குவதற்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு முகாம்கள் கடந்த 14-ம் தேதி தொடங்கி வரும் 28-ம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்நிலையில், வெள்ளத்தால் சிலிண்டர்களை இழந்தவர்களுக்கு புதிய சிலிண்டர்களை வழங்க இந்த முகாம் மூலம் விண்ணப்பங்களை பெற எண்ணெய் நிறுவனங்களை அரசு அறிவுறுத்தியது.

இதுகுறித்து விவாதிக்க எண்ணெய் நிறுவன அதிகாரிகளின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், தமிழக அரசு நடத்தி வரும் சிறப்பு முகாம்களிலேயே சிலிண்டர்களை இழந்தவர்களுக்கு புதிய சிலிண்டர்களை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த சிறப்பு முகாம்களில் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்று விண்ணப்பங்களை பெறுவார்கள். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் 62 சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் தண் டையார்பேட்டை, மைலாப்பூர், அமைந்தகரை, எழும்பூர், வேளச்சேரி, மாம்பலம், புரசைவாக்கம், அயனாவரம், பெரம்பூர் மற்றும் கிண்டி ஆகிய இடங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x