Published : 21 Dec 2015 07:58 PM
Last Updated : 21 Dec 2015 07:58 PM
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் குறித்து விமர்சனம் செய்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் கலைச்செல்வி இன்று காலையில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், ''தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கரகாட்டம் ஆடும் பெண் போல இருப்பதாக இளங்கோவன் கூறியிருக்கிறார். பெண்களை பற்றி இளங்கோவன் அடிக்கடி தவறான முறையில் விமர்சனம் செய்து வருகிறார்.
பிரதமர் நரேந்திரமோடி - முதல்வர் ஜெயலலிதா சந்திப்பையும் கொச்சைப்படுத்தி அவர் பேசி இருந்தார். இதுபோன்று பெண்களை பற்றி தொடர்ந்து தவறாக பேசும் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT