Published : 15 Dec 2015 08:32 AM
Last Updated : 15 Dec 2015 08:32 AM
சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் துப்புரவுப் பணியில் ஈடுபட்ட அனைவருக் கும் தேமுதிக கட்சி தலைவர் விஜய காந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித் திருப்பதாவது: தேமுதிக சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சென்னை மாநகராட்சியிலுள்ள 200 வார்டுகளில் துப்புரவுப் பணி கள் நடைபெற்று வருகின்றன. இப்பணியில் தேமுதிகவினருடன், பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் கட்சி வேறுபாடின்றி ஈடுபட்டனர். இவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், துப்புரவுப் பணி மேற் கொள்ளத் தேவையான ஏற்பாடு களை செய்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT