Published : 28 Dec 2015 08:15 AM
Last Updated : 28 Dec 2015 08:15 AM

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இன்றுமுதல் பாரம்பரிய உடையில் பணிக்கு செல்லும் கோயில் ஊழியர்கள்

பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இன்று முதல் பாரம்பரிய உடைகளில் பணிக்கு செல்ல திருக்கோயில் பணியாளர்கள் கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.

அரைக்கால் ட்ரவுசர், ஜீன்ஸ், டீ-சர்ட், லெகிங்ஸ் போன்ற ஆடைகளை அணிந்து தமிழகத்தில் உள்ள பாரம்பரிய கோயில்களுக்குள் செல்ல ஜனவரி 1 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை வரவேற்கும் விதமாக கோயில் பணியாளர்கள் இன்று முதல் பாரம்பரிய உடைகளில் பணிக்குச் செல்ல முடிவெடுத்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழக திருக்கோயில் பணியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் வை.ஈஸ்வரன் கூறும்போது, “ கோயில்களில் பாரம்பரியமான ஆடைகளை அணிய வேண்டும் என்பதற்காக ஜீன்ஸ், லெகிங்ஸ் உள்ளிட்ட ஆடைகளுக்கு ஜனவரி 1 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொது மக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோயில் பணியாளர்களாகிய நாங்களே ஜனவரி 1-ம் தேதிக்கு முன்பா கவே பாரம்பரிய உடை அணிந்து கோயிலுக்கு செல்ல முடிவெடுத் துள்ளோம். அதன்படி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் ஊழியர்கள் 28-ம் தேதி யன்று வேஷ்டி, குர்தா உள்ளிட்ட ஆடைகளை அணிந்து பணிக்கு செல்லவுள்ளோம். தமிழகம் முழுவதும் உள்ள ஊழியர்களும் பாரம்பரிய ஆடைகள் அணிந்து பணிக்கு செல்ல முடிவெடுத்துள்ளனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x