Published : 23 Nov 2015 09:52 PM
Last Updated : 23 Nov 2015 09:52 PM

கனமழை பாதிப்பு எதிரொலி: பல்கலை. தேர்வுகள் தள்ளிவைப்பு

கனமழை பாதிப்பால் நவ.24, 25 தேதிகளில் நடக்கவிருந்த சென்னை, அண்ணா, சட்ட பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

சட்ட பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைப்பு

கனமழை காரணமாக, 24, 25-ந் தேதிகளில் நடைபெறவிருந்த சட்ட பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைக்கப்படுவதாகவும், மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பி.வணங்காமுடி தெரிவித்தார்.

சென்னை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

இதே போல் 24, 25-ந் தேதிகளில் நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாகவும், மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.தாண்டவன் தெரிவித்தார்.

பொறியியல் செமஸ்டர் தேர்வுகளின் மறுதேதிகள்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

கனமழை காரணமாக, நவம்பர் 12 முதல், 28-ந் தேதி வரை தள்ளிவைக்கப்பட்ட பொறியியல் செமஸ்டர் தேர்வுகளின் மறுதேதி விவரங்கள் அடங்கிய பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டது.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தொடர் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான (முழுநேரம், பகுதிநேரம்) புதிய அட்டவணையை > https://www.annauniv.edu வலைதளத்தில் அறியலாம்.

வேறு எந்த வலைதளத்தின் தகவலையும் மாணவர்கள் நம்ப வேண்டாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x