Published : 22 Mar 2021 03:13 AM
Last Updated : 22 Mar 2021 03:13 AM

திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதிக்கு ஆதரவாக தொண்டாமுத்தூரில் பஞ்சாப் விவசாயி வாக்கு சேகரிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதிக்கு ஆதரவாக பஞ்சாபை சேர்ந்த விவசாயி நேற்று வாக்குசேகரித்தார்.

டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றராஜ்விந்தர் சிங், தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட குனிய முத்தூர், சுண்டாக்காமுத்தூர் சாலை, திருநாள் நகர் பகுதிகளில் நேற்று திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதிக்கு ஆதரவாக வாக்குசேகரித்தார். அவர் பேசும்போது, "விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்" என்றார்.

இதில், வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி பேசும்போது, "அமைச்சர் வேலுமணி தனது வேட்புமனுவில், சொத்து விவரங்களை மறைத்துள்ளார். நேருக்கு நேர் விவாதத்துக்கு வரத் தயாரா என்ற எனது சவாலுக்கு, இதுவரை பதில் இல்லை. தொண்டாமுத்தூர் தொகுதியில் வேட்பாளரை மாற்றி அறிவித்ததன் மூலம், கமல்ஹாசன் விலைபோய்விட்டார் எனத் தெரிகிறது. தொகுதி மக்கள் மாற்றத்துக்கு தயாராகிவிட்டனர். பாஜக-அதிமுக அரசுகள் இணைந்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறித்து வருகின்றன. எனவே, அவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்க,பஞ்சாப் விவசாயிகளின் பிரதிநிதியாக ராஜ்விந்தர் சிங் இங்கு பிரச்சாரம் செய்ய வந்துள்ளார். வாக்காளர்களுக்கு அமைச்சர் சார்பில் பணம் கொடுப்பது தெரியவந்தால், தேர்தல் அதிகாரிகளிடம் முறையிடுவோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x