Published : 13 Mar 2021 03:12 AM
Last Updated : 13 Mar 2021 03:12 AM

வார விடுமுறை, வேலைநிறுத்தம் காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு வங்கி செயல்படாது

சென்னை

ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக பொதுத் துறை வங்கிகளில் 4 நாட்களுக்கு பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயம் ஆக்கப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கெனவே திட்டமிட்டபடி மார்ச்15, 16-ம் தேதி களில் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று 2-வது சனிக்கிழமை, நாளை ஞாயிறு என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை. அடுத்த 2 நாட்களுக்கு வேலைநிறுத்தம் நடக்க உள்ள தால், இன்று முதல் 16-ம் தேதி வரை 4 நாட்கள் பொதுத் துறை வங்கிகள் செயல்படாது. இத னால், பணம், காசோலை பரிவர்த்தனைகள் உள்ளிட்ட அனைத்து விதமான வங்கிச் சேவை களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x