Published : 04 Nov 2015 08:00 AM
Last Updated : 04 Nov 2015 08:00 AM
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் போன்ற தனி நபர்களை நம்பி காங்கிரஸ் இல்லை என அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.
டெல்லி சென்றுள்ள குஷ்பு, நேற்று முன்தினம் ராகுல் காந்தியை யும் நேற்று சோனியா காந்தியையும் சந்தித்து இளங்கோவனுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:
ப.சிதம்பரம் தலைமையில் 11 பேர் சோனியா, ராகுலை சந்தித் தது குறித்து எனக்கு தெரியாது. பத்திரிகைகள் மூலமே தெரிந்து கொண்டேன். காங்கிரஸில் இணைந்த பிறகு மாதம் ஒருமுறை டெல்லி வந்து சோனியா, ராகுலை சந்திப்பதை வழக்கமாகக் கொண் டுள்ளேன். அந்த அடிப்படையில் நேற்று முன்தினம் ராகுலையும், நேற்று சோனியாவையும் சந்தித்துப் பேசினேன்.
ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நடிகர், நடிகைகளை நம்பி காங்கிரஸ் இல்லை என தெரிவித்துள்ளார். கார்த்தி சிதம்ப ரம், ப.சிதம்பரம், தங்கபாலு என தனி நபர்கள் யாரை நம்பியும் காங்கிரஸ் இல்லை. கோடிக்கணக்கான தொண்டர்களையும் நேரு, இந்திரா, ராஜீவ் போன்ற தலைவர்களின் தியாகத்தையும் நம்பியே காங்கிரஸ் உள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் சிறiப்பாக செயல்படுகிறார். கட்சி மேலிடம் அவரது பணிகளை உணர்ந்தே உள்ளது.
இவ்வாறு குஷ்பு கூறினார்.
குஷ்புவின் கருத்துக்கு மகளிர் காங்கிரஸ் தேசிய செயலாளர் எம்.ஹசீனா சையத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை யில், ‘‘இந்தியாவின் இணையற்ற பொருளாதார மேதையான ப.சிதம் பரத்தை விமர்சிக்க குஷ்புவுக்கு தகுதியில்லை. வேறு கட்சியிலிருந்து வந்த குஷ்பு, கட்சிக்காக உழைத்த தலைவர்களை விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். மூத்த தலைவர்களை பற்றி சற்று நாவடக்கத்துடன் பேச வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து குஷ்புவிடம் கேட்ட போது, ‘‘ஹசீனா சையத் போன்ற வர்களுக்கெல்லாம் நான் பதில் சொல்லத் தேவையில்லை. யாருக்கு பதில் சொல்ல வேண் டுமே அவர்களுக்கு பதில் சொல்லி விட்டேன்’’ என்றார்.
தலைமையை மாற்ற தலைவர் கள் போர்க்கொடி, தங்கபாலுக்கு இளங்கோவன் சவால், சிதம்பரத் துக்கு குஷ்பு எதிர்ப்பு, குஷ்புக்கு ஹசீனா கண்டனம் என தமிழக காங்கிரஸில் மீண்டும் கோஷ்டிப் பூசல் உச்சத்துக்கு வந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT