Published : 05 Feb 2021 03:16 AM
Last Updated : 05 Feb 2021 03:16 AM

தேர்தல் தொடர்பான முடிவுகளை எடுக்க பிப்.11-ல் மக்கள் நீதி மய்யம் பொதுக்குழு: கமல் தலைமையில் நடைபெறுகிறது

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதலாவது பொதுக்குழு கூட்டம்கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் வரும் 11-ம் தேதிநடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் நடக்கவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பிலும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு, பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில், மக்கள் நீதிமய்யம் கட்சி தொடங்கப்பட்ட பிறகு முதல்முறையாக அக்கட்சியின் பொதுக்குழு கூட்டப்படுகிறது. இதுதொடர்பாக கட்சிநிர்வாகிகளுக்கு பொதுச் செயலாளர் சந்தோஷ் பாபு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

சென்னை வானகரத்தில்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதலாவது பொதுக்குழு கூட்டம்பிப்.11-ம் தேதி கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னை வானகரத்தில் நடக்க உள்ளது.

இதில், தமிழக, புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல், மக்கள் நீதி மய்யத்தின் 4-ம் ஆண்டு தொடக்க விழா மாநாடு உள்ளிட்டவை தொடர்பான பல்வேறு முக்கிய முடிவுகளை கமல்ஹாசன் அறிவிக்க உள்ளார்.

எனவே, கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களாகிய தலைவர், துணைத் தலைவர்,பொருளாளர், பொதுச் செயலாளர்கள், சார்பு அணியின் மாநில செயலாளர்கள், மண்டலபொறுப்பாளர்கள், கட்டமைப்புமற்றும் சார்பு அணிகளின் மாவட்ட செயலாளர்கள், இணை,துணை செயலாளர்கள் அனைவரும் பொதுக்குழு கூட்டத்தில்தவறாமல் கலந்துகொள்ள வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x