Published : 05 Feb 2021 03:17 AM
Last Updated : 05 Feb 2021 03:17 AM

மருத்துவக் கல்லூரி கல்விக் கட்டணம் குறைந்தது; சிதம்பரம் மாணவர்களின் 58 நாள் போராட்டம் வெற்றி: போராட்டக் களத்தில் பட்டாசு வெடித்து உற்சாகம்

தங்களின் 58 நாள் தொடர் போராட்டம் வெற்றி பெற்றதால் மகிழ்ச்சியில் திளைக்கும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள்.

விருத்தாசலம்

பிற அரசு மருத்துவக் கல்லூரிகளைப் போலவேசிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியிலும் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றுதமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து சிதம்பரம் மாணவர்களின் 58 நாள் தொடர் பேராட்டம் முடிவுக்கு வந்தது.

2013-ம் ஆண்டு முதல் அரசு நிதியில் இயங்கி வருகிறது சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி. பிற அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தை தங்களுக்கு வசூலிக்க வலியுறுத்தி கடந்த 58 நாட்களாகஇந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பல் வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரி காலவரையின்றி மூடப்பட் டது. ஆனாலும், மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். மாணவர்களின் தொடர் போராட் டம் காரணமாக கடந்த ஜனவரி 29-ம் தேதி ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி சுகாதா ராத்துறைக்கு மாற்றப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனாலும், கல்விக் கட்டணத்தை குறைப்பது தொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லை.

தற்போது படிக்கும் 2,293 மாணவர்களின் கல்விக் கட்டணம் குறித்தும், எதிர்வரும் ஆண்டில் சேரவிருக்கும் மாணவர்களின் கட்டணம் குறித்தும் அரசின் அறிவிப்பில் தெளிவான விளக்கம் இல்லாததால், மாணவர்கள் மிகவும் ஏமாற்றப்பட்டிருப்பதாகவும், உயர் கல்வித் துறையிலிருந்து சுகாதாரத்துறைக்கு கல்லூரி மாற்றப்பட்டிருப்பது நிர்வாக மாற்றம் மட்டுமே என்பதால், கல்விக் கட்டணம் குறித்து அரசு தெளிவான தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் தரப்பில் அறிவித்திருந்தனர்.

இதனிடையே சிதம்பரம் ராஜா முத்தையாமருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் செவிலியர் கல்லூரிகளில் உள்ளதைப் போன்று குறைக்கப்பட்டிருப்பதாகவும், மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கல்லூரிக் குத் திரும்புமாறு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதன்படி, எம்பிபிஎஸ் பாடப் பிரிவிற்கு ரூ.13,610, பிடிஎஸ் பாடப் பிரிவிற்கு ரூ.11,610,பட்ட மேற்படிப்புக்கு ரூ.30,000, பட்ட மேற்படிப்பு பட்டய பாடப் பிரிவிற்கு ரூ.20,000, பிஎஸ்சி (செவிலியர்) இயன்முறை மருத்துவம் மற்றும் செயல்முறை மருத்துவப் பாடப் பிரிவிற்கு ரூ.5 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மாணவர்கள் கடந்த 58 நாட்களாக நடத்தி வந்த தொடர் போராட்டத்தை நேற்று வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். கல்லூரி வளாகத்தில் போராட்டக் களத்தில் பட்டாசு வெடித்து, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x