Published : 29 Mar 2014 12:00 AM
Last Updated : 29 Mar 2014 12:00 AM

மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பிரச்சார சுற்றுப்பயணம்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் மார்ச் 29 முதல் ஏப்ரல் 22 வரை சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

அதன்படி, மார்ச் 29 முதல் ஏப்ரல் 7 வரை மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவள்ளூர், தாம்பரம், காஞ்சி புரம், வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், போளூர், திருவண்ணாமலை, செங்கம், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர், பொள்ளாச்சி, கோயம்புத்தூர், அவினாசி, ஈரோடு, மதுரை, திண்டுக்கல், பழநி, தேனி, பெரியகுளம், கோவில்பட்டி, சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்கிறார்.

ஏப்ரல் 11 முதல் 22 வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, ஆலங்குளம், விருதுநகர், திருப்பரங்குன்றம், ராமநாதபுரம், சிவகங்கை, ஆலங்குடி, கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், சிதம்பரம், தஞ்சாவூர், ஒரத்தநாடு, அதிராம்பட்டினம், நாகப்பட்டினம், குடவாசல், மயிலாடுதுறை, புதுச்சேரி, காரைக்கால், கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், வடசென்னை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்து இறுதியாக திருவள்ளூர் தொகுதி ஆவடியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x