Published : 19 Oct 2015 08:19 AM
Last Updated : 19 Oct 2015 08:19 AM
முதல்வர் ஜெயலலிதா மீது அவ தூறு வழக்குத் தொடர உள்ள தாக காங்கிரஸ் கட்சியின் மகளிரணி மாநிலத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான விஜயதாரணி தெரிவித்தார்.
அவர் திருச்சியில் செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது: காய்கறிகள், பருப்பு, எண்ணெய் என அனைத்துப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந் துள்ளதால், மக்கள் பெரிதும் பாதிக் கப்பட்டுள்ளனர். அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக் கல் சட்டம் தமிழகத்தில் முறையாக நடைமுறைப்படுத்தாததே இதற் குக் காரணம்.
மகளிர் சுயஉதவிக் குழுவின ருக்கு ரூ.6,000 கோடி நிதியுதவி வழங்குவதாகக் கூறி, அந்த நிதியை தேர்தலில் முறைகேடாகப் பயன்படுத்த அதிமுக முயற்சி மேற்கொண்டுள்ளது. மக்களுக்கு வழங்கும் மின்விசிறி, கிரைண்டர், மிக்ஸி ஆகியவை தரமற்றதாக உள்ளன.
தமிழகத்தில் மதுவிலக்குப் போராட்டங்கள் கடுமையான முறை யில் ஒடுக்கப்பட்டு வருகின்றன. டாஸ்மாக் கடைகள் அதிகமாக உள்ளதால், ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக கட்சி நாளிதழில் என் னைப் பற்றி அவதூறாக கட்டுரை வெளியானது தொடர்பாக, ஜெய லலிதா மற்றும் அந்த நாளிதழ் ஆசிரியர் உள்ளிட்டோர் மீது அவதூறு வழக்குத் தொடரு வேன்.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. டிஎஸ்பி விஸ்ணுபிரியா வழக்கு சரியான முறையில் நடைபெறவில்லை. எனவே, இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும். காவிரி உள்ளிட்ட பிரச்சினைகளில் அண்டை மாநிலங் களில் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின் றன. ஆனால், தமிழக அரசு இதை வைத்து அரசியல் செய்து கொண்டி ருக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட காங்கிரஸ் அஞ்சவில்லை என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT